Friday, July 8, 2016

அப்துல்கலாம் :

Posted by Unknown on 7:43 AM with No comments
அப்துல்கலாம் :

1.   நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் -ஆனால்
     அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

2.உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள் .

3.வாழ்வில் வெற்றிபெற எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்
   ஆனால் தோல்வி பெறாமல் இருக்க ஒரு எதிரி யாவது இருக்க வேண்டும் .

4.இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் ஒதுக்க பட்டுள்ளது.
    ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

5. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் .
     கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்

Posted by Unknown on 7:33 AM with No comments
வாதத்தை வாதத்தால் வெல்ல வேண்டும்-வந்து
வாதிட்டோர்  வாய்மூடிச்  செல்ல வேண்டும்!
பேதமின்றி கருத்துகள் மோத வேண்டும்-அவை
பெருமழை பேரிடிபோல் அமைய வேண்டும்!

சொல்லுகின்ற சொல்தரமாய் அமைய வேண்டும்-என்றும்
கடுசொல் அதில்கலவா  தொழிய வேண்டும்!
சொல்லி வைத்த சொல்லை மண்ணில்  மற்றொரு சொல்
வெல்லவழி இல்லாது அமைய வேண்டும்!

கருத்தாழம் வாதத்தில் துள்ள வேண்டும்-அது
காண்பவர் உள்ளத்தை அள்ள  வேண்டும்!
இருதரப்பு வாதமும் சிறக்க வேண்டும்-அதன்
இடைஇடையே  பேச்சில் கனல் பறக்க வேண்டும்!

வாதிட்டோர்  தனை  மாந்தர் மதிக்க வேண்டும்-அதன்
வாதத்தை புது வரவாய்  ஏற்க வேண்டும்!
கோதில்லா வாதத்தின் உட்பொருளை-இந்தக்
குவலயமே  தமிழ் மறையாய் போற்ற வேண்டும்!