மக்களெல்லாம் மண்மீது வாழ்வ தற்கும்
மனுநீதி மாநிலத்தில் தழைப்ப தற்கும்
கடல்சூழ்ந்த காசினி நிலைப்ப தற்கும்
காவலரின் சேவையிங்கு தேவை யன்றோ!
காவலர்கள் இல்லை யென்றால் என்னவாகும் ;
கன்னியர்கள் கற்பெல்லாம் சோரம் போகும்;
கயவர்களின் கையிலே சிக்கி கொண்டு
காசினியே கொலைக்களமாய் மாறிப் போகும்!
காத்து வைத்த பொருளெல்லாம் கொள்ளை போகும்;
கயவர்களின் நடமாட்டம் மிகுதி யாகும்!
கெட்டவர்க்கு நல்லவர்கள் அஞ்சி வாழும்
கேவலமும் நாட்டுக்குள் மலிந்து போகும்!
திருமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
திருடர்கள் வந்தாலும் அழைக்கின் றீர்கள்;
மறுமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
மாண்டாலும் எங்களையே அழைக்கின் றீர்கள்!
நல்லதற்கும் கெட்டதற்கும் அழைக்கின் றீர்கள்
நம்பிக்கைக் கொண்டுவிட்ட காரணத்தால் ;
கறிக்குதவும் 'வேப்பி'லையா ய் எண்ணா வண்ணம்
காவலரை கண்ணியமாய் நடத்து வீரா?
மனுநீதி மாநிலத்தில் தழைப்ப தற்கும்
கடல்சூழ்ந்த காசினி நிலைப்ப தற்கும்
காவலரின் சேவையிங்கு தேவை யன்றோ!
காவலர்கள் இல்லை யென்றால் என்னவாகும் ;
கன்னியர்கள் கற்பெல்லாம் சோரம் போகும்;
கயவர்களின் கையிலே சிக்கி கொண்டு
காசினியே கொலைக்களமாய் மாறிப் போகும்!
காத்து வைத்த பொருளெல்லாம் கொள்ளை போகும்;
கயவர்களின் நடமாட்டம் மிகுதி யாகும்!
கெட்டவர்க்கு நல்லவர்கள் அஞ்சி வாழும்
கேவலமும் நாட்டுக்குள் மலிந்து போகும்!
திருமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
திருடர்கள் வந்தாலும் அழைக்கின் றீர்கள்;
மறுமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
மாண்டாலும் எங்களையே அழைக்கின் றீர்கள்!
நல்லதற்கும் கெட்டதற்கும் அழைக்கின் றீர்கள்
நம்பிக்கைக் கொண்டுவிட்ட காரணத்தால் ;
கறிக்குதவும் 'வேப்பி'லையா ய் எண்ணா வண்ணம்
காவலரை கண்ணியமாய் நடத்து வீரா?

0 comments:
Post a Comment