Friday, June 24, 2016

Every night in my dreams !!!!

Posted by Heart hacker on 7:37 AM with No comments
பனி அடர்ந்தத ஜன்னல் வழி..
கருமையின் விளிம்பில் வானத்தின் வளைவுகள்..
இரவென்று இன்னிசை பேச..
இரவின் மடியில்..
குளிரின் பிடியில்..
உன் ஸ்பரிசம் தேடி..
மெத்தையின் மீது மெத்தயாய் நான்..!

உன் பார்வைகள் என்னை அம்பாய் தைக்க..
தைத்த இடமெல்லாம் அமுதம் வழியும்..
வெட்க்கதின் புன்னகையொடு நீ..!..
இன்னும் கொன்று விடு..
இது மௌனத்தின் சம்மதம்..!..
உன் அனைப்பின்
கதகதப்பில் நான் உரைய..
இதழின் கையொப்பம் என்
கண்களில்..

தேவதை இதழில் தொடங்கிய பயணம்
இடையில் முடிய..
படர்ந்த பனியோ புகையாய் மறைந்ததே..
உன் முகத்தோடு..!

காலை என்று சுட்ட சூரியன்
வண்ணங்கள் காட்ட..
காற்றில் எந்தன் கைகள் மட்டும்
உன் ஸ்வாசம் தேடிய வன்னம்..
அந்த வன்னம் மட்டும் கண்ணில்
பட மறுத்து ஒலிந்து கொள்ளும்..இது..
இறைவன் விளையாட்டின் ஒரு இழை..!

எட்டுத் திக்கும் தேடி தேடி..
வழி மேல் விழியோடு வழிந்த கண்கள்..
எட்டா தூரத்தில் புன்னகை..
இருந்தும் உயிர் விட மனமில்லை..!

போர்வைக்குள் தனி உலகம்..
இன்னும் ஒரு இரவுப் பயணம்..
இன்று இரவு காத்திருக்கும்..!
உன்னுடன்..!
அதற்காக மட்டுமே..
பகல் முழுதும் வாழ்கிறேன்..!!!
இரவுக்கு: பன்னிரெண்டு மணி முப்பது நிமிடம் பத்து
வினாடிகள்..

0 comments:

Post a Comment