Friday, June 24, 2016

முகமூடிகள்

Posted by Heart hacker on 7:13 AM with No comments
ன்று ஒரு நாள்...
நானும் சிறு பிள்ளையாய்..!!
ஊரெங்கும் அழகாய் மின் விளக்குகள்..
திருவிழா என்றார்கள்..!!
ராஜாவாய் கடைதெரு பயணம்...
காரணம் கால்சட்டையில் இருந்த பத்து ரூபாய்..!!
அங்கும் இங்கும் பார்த்த கண்கள்..
பாதைக் கடை அணிவகுப்பில் சட்டென்று பாதம் நிற்க..!!
ஆசையாய் வாங்கிய முகமூடிகள்...
பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு வெள்ளை..!!
வாழ்க்கை பாதையில் அடிமேல் அடிவைத்து
பயணம் தொடர..
அன்று விளயாட்டாய் அனிந்த முகமூடிகள்
இன்றும் கண்முன்...
இம்முறை வண்ணங்கள் இல்லை...
முகங்களாக..
முகங்கள் பொதிந்த எண்ணங்களாக...!!
அதற்குள் சிக்கி சிதைந்தவனாய்..
மலைத்து போய் நின்ற என்னை..
“மண்டி இடு” என்று அழைத்தது
மாதா கோவில் மணி...!!
மணி ஓசைக்கு செவிமடித்து...
அன்னையின் மடி தெடி சென்றால்..
கடவுளின் முன் முகமூடி
செல்லவில்லை போலும்..
கண்ணீர் துளிகள்..
மெழுகுவர்த்தியொடு சேர்ந்து..
உருகும் இதயங்கள்...!!
“இறைவா என் முகத்திரை கிழியாமல் பார்த்துகொள்”!!
ஒரு ரூபாய் காணிக்கை..!!
ஏளனச் சிரிப்போடு நான்
மறுபடியும் பாதையில்...
எனக்கான முகத்திரை தெடி..!!
**kavi**
<heart hacker>

0 comments:

Post a Comment