Friday, July 8, 2016

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்

Posted by Unknown on 7:33 AM with No comments
வாதத்தை வாதத்தால் வெல்ல வேண்டும்-வந்து
வாதிட்டோர்  வாய்மூடிச்  செல்ல வேண்டும்!
பேதமின்றி கருத்துகள் மோத வேண்டும்-அவை
பெருமழை பேரிடிபோல் அமைய வேண்டும்!

சொல்லுகின்ற சொல்தரமாய் அமைய வேண்டும்-என்றும்
கடுசொல் அதில்கலவா  தொழிய வேண்டும்!
சொல்லி வைத்த சொல்லை மண்ணில்  மற்றொரு சொல்
வெல்லவழி இல்லாது அமைய வேண்டும்!

கருத்தாழம் வாதத்தில் துள்ள வேண்டும்-அது
காண்பவர் உள்ளத்தை அள்ள  வேண்டும்!
இருதரப்பு வாதமும் சிறக்க வேண்டும்-அதன்
இடைஇடையே  பேச்சில் கனல் பறக்க வேண்டும்!

வாதிட்டோர்  தனை  மாந்தர் மதிக்க வேண்டும்-அதன்
வாதத்தை புது வரவாய்  ஏற்க வேண்டும்!
கோதில்லா வாதத்தின் உட்பொருளை-இந்தக்
குவலயமே  தமிழ் மறையாய் போற்ற வேண்டும்!





0 comments:

Post a Comment