Tuesday, August 2, 2011

Posted by Heart hacker on 1:51 AM with No comments



நெடுநேர மௌனத்தின்
கூர் விளிம்பில்,
விழியும் காகிதமும்

விரும்பியிருந்தது சில
நீர்த் துளிகள்...

இன்னும் நீண்ட
அம் மௌனத்தின்
முற்றுப்புள்ளியில்,
காகிதம் நிரம்பியிருந்தது
,
உன் ஒற்றை பெயரில்...!

கண்கள் ஏனோ சிரித்திருந்தது

Monday, August 1, 2011

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Posted by Heart hacker on 5:24 AM with No comments




நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..

மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..

சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..

மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..

ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..

விடியாத இரவொன்று வேண்டும்..

Posted by Heart hacker on 4:34 AM with 2 comments
தனிமையான இரவில்
துணைக்கு வருகிறேனென்று
அடம்பிடித்தது கண்ணீர்..

வெறித்து நோக்கிய கண்களில்
வெற்றிடமின்றி நிரம்பிய துளிகள்
வெளியேற தொடங்கியிருந்தன..
கண்களின் உறுத்தலோ
கண்ணீரின் பாரமோ
இமைகள் சேர்ந்திருந்தது..

மொத்தமாய் வழிந்த நீர்த்துளிகள்
முகத்திலிறங்கி கன்னம் கிழித்து
தலையணையில் கோலமிட்டது..
காற்றாடியின் அதிவேக
காற்றுக்கும் காயமறுத்தது
கண்ணீரும் கோலமும்..

யாருமற்ற தனிமையில்
ஆறுதலாயிருந்தது அழுகை..
இரவிருக்கும்வரை தான்
இரகசியமாய் அழமுடியுமென்று
இமைகள் நனைக்கிறேன்..
இதமாகவே இருந்தது - என்
காயத்திற்கு கண்ணீர்..

விடியும் பொழுதில்
தூக்கம் தொலைத்திருந்தேன்..
துக்கம் குறைத்திருந்தேன்..

காத்திருக்கிறேன்..
வடுக்களில் வடியவிட
வற்றாத விழிநீருக்கும்..
விடியாத ஓர் இரவிற்கும்..